2 மாதங்களாக ஊதியம் வழங்காததால் கடலூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் ஸ்டிரைக்

By க.ரமேஷ்

கடலூர்: கடலூர் மாநகராட்சியின் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு 2 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு தூய்மைப் பணிகளை செய்வதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் பணியில் உள்ளனர். இதில்லாமல், 360 பேர் தனியர் நிறுவனமான கிரீன் சிட்டி நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் முதுநகர் பகுதியில் இவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் மாநகராட்சி அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மைப் பணியாளர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது. கிரீன் சிட்டி நிறுவனத்தினர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்