உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் கடும் நீர் பனி கொட்டுவதால் குளிர் நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் ஜனவரி மாத இறுதி வரை நீர் பனி மற்றும் உரை பனி தாக்கம் இருக்கும். இந்த ஆண்டு பருவமழை அதிகமாக பெய்த நிலையில் தற்போது பனிப் பொழிவு தொடங்கியுள்ளது. இன்று உதகை நகரில் பெரும்பாலான இடங்களில் நீர் பனி கொட்டியது.
நீர் நிலைகள் அருகே உள்ள புல்தரை மைதானங்கள், தாவரவியல் பூங்கா, மார்க்கெட் பகுதி, ரேஸ் கோர்ஸ் மைதானம், படகு இல்லம், போன்ற இடங்களில் நீர் பனி அதிகமாக காணப்பட்டது.
» கடலூர் பாசனத்திற்காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க அன்புமணி வலியுறுத்தல்
» சென்னை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
அதேபோல் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது நீர் பனி பொழிவு அதிகமாக காணப்பட்டது. நீர் பனி காரணமாக கடும் குளிர் நிலவுவதால் நெருப்பை மூட்டி உதகை பொதுமக்கள் குளிரை சமாளித்து வருகின்றனர்.