சென்னை | 19 மின் ரயில் சேவையில் மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கடற்கரை யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 19 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன. சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு செப்.13, 16 ஆகிய தேதிகளில் இரவு 8.25, 8.55, 10.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருவள்ளூர் - சென்னை கடற்கரைக்கு செப்.13, 16 ஆகிய தேதிகளில் இரவு 9.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை - திருவள்ளூருக்கு அதே நாட்களில் இரவு 7.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், கடற்கரை - அரக்கோணத்துக்கு செப்.14, 17 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.05 மணிக்குபுறப்படும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி - கடற்கரைக்கு செப்.13,16 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், கடற்கரை - கும்மிடிப்பூண்டிக்கு செப்.13, 16 ஆகிய தேதிகளில் இரவு10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆகிய ரயில்களும் முழுவதும் ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு செப்.13, 16 ஆகிய தேதிகளில் இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்படவேண்டிய ரயில்கள், கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு செப்.14, 17 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு செப்.13, 16 ஆகிய தேதிகளில் இரவு 9.10, 10.10, 11.00 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள், எழும்பூர் - கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.

கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரைக்கு செப்.13, 16 ஆகிய தேதிகளில் இரவு 10.10, 10.40, 11.15 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள், தாம்பரம் - கடற்கரைஇடையே பகுதி ரத்து செய்யப்படஉள்ளன. திருமால்பூர் - சென்னைகடற்கரைக்கு செப்.13, 16 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், எழும்பூர் - சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. சென்னை ரயில்வே கோட்டம்வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE