ஐபிஎஸ் பயிற்சியில் முதலிடம் பிடித்தவர் தூத்துக்குடிக்கு புதிய ஏஎஸ்பி-யாக நியமனம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: ஐபிஎஸ் பயிற்சியில் அகில இந்திய அளவில் விருது பெற்ற சி.மதன், தூத்துக்குடிஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த சிட்டிபாபு-சித்ரா தம்பதியரின் மகன் சி.மதன் (29). எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவரான இவர், 2022-ல் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, 2 ஆண்டுகள் ஹைதராபாத்தில் உள்ள போலீஸ் அகடாமியில் பயிற்சி பெற்றார். தொடர்ந்து பயிற்சி ஏ.எஸ்.பி.யாக தஞ்சாவூரில் கடந்த ஜனவரி 7-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை 6 மாதங்கள் பணியாற்றினார்.

பின்னர் ஹைதராபாத்தில் 2 மாதங்கள் பயிற்சியை நிறைவு செய்த மதன், தற்போது தூத்துக்குடி நகர ஏஎஸ்பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 9-ம் தேதி அவர் பொறுப்பேற்க உள்ளார். தூத்துக்குடி ஏஎஸ்பியாக பொறுப்பேற்கும் மதன், ஐபிஎஸ் பயிற்சியின் போது அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு, அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதிஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில் மதனுக்கு, குடியரசுத் தலைவர் கோப்பை, பிரதமர் பேட்டன் மற்றும் உள்துறை அமைச்சர் ரிவால்வர் ஆகியவற்றை சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்வழங்கிப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE