சென்னை: தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனமோசடி தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநரான தேவநாதன் யாதவ், குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மூவரையும் 7 நாள் போலீஸார்காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்திருந்த நிலையில், 7 நாள் விசாரணைக் குப்பிறகு மூவரும் நேற்று சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்புநீதிமன்றத்தில் நீதிபதி மலர் வாலண்டினா முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர். அதையடுத்து மூவரையும் செப்.17 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.