இமானுவேல் சேகரன் நினைவு தினம்: செப்.11-ல் 4 வட்டங்களில் பள்ளி விடுமுறை; கீழடி வைப்பகம் மூடல்

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: இமானுவேல்சேகரன் நினைவுநாளான செப்.11-ம் தேதி கீழடி அகழ் வைப்பகம் மூடப்படுகிறது. மேலும், சிவகங்கை மாவட்டத்தில் 4 வட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் கூறியது: “ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் செப்.11-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அகழ் வைப்பகம் இயங்காது. அதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய 4 வட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும்,” என்று அவர் கூறினார்.

இதனிடையே, பரமக்குடியில் செப்.11-ல் நடைபெறும் இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வருவோர் வாடகை வானகங்களில் வந்து செல்ல அனுமதியில்லை என ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE