தேங்காப்பட்டணம் கடலில் விழுந்த மீனவர் உயிரிழப்பு

By எல்.மோகன்

நாகர்கோவில்: தேங்காப்பட்டணம் அருகே இனயம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிதாசன் மகன் ஆரோக்கிய நிதின் (27). இவர் பைபர் படகில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில், அதிகாலையில் ஆரோக்கிய நிதின் கடலில் மீன் பிடிக்க சென்றார். தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 5 நாட்டிங்கல் மைல் தூரத்தில் வள்ளத்தில் மீன்பிடித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி கடலில் விழுந்தார். அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் இதைப் பார்த்து கரையில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர் .

கடலில் இறங்கி ஆரோக்கிய நிதினை தேடினர். அப்போது அவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்து குளச்சல் மரைன் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மரைன் போலீசார் நிதின் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE