சென்னை - பெசன்ட் நகர் வேளாங்கண்ணி திருத்தல விழாவுக்காக செப்.8 வரை கூடுதல் மாநகர பேருந்துகள்

By செ.ஆனந்த விநாயகம்

சென்னை: பெசன்ட் நகர் வேளாங்கண்ணி திருத்தல திருவிழாவை முன்னிட்டு, செப்டம்பர் 8-ம் தேதி வரை கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று மாலை தொடங்குகிறது. அடுத்த மாதம் 8ம் தேதியுடன் விழா நிறைவடைகிறது.

இதையொட்டி, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து அன்னை வேளாங்கண்ணித் திருத்தலத்துக்கு, செப்டம்பர் 8-ம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்பட உள்ளது. இந்நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்