சென்னை - பெசன்ட் நகர் வேளாங்கண்ணி திருத்தல விழாவுக்காக செப்.8 வரை கூடுதல் மாநகர பேருந்துகள்

By செ.ஆனந்த விநாயகம்

சென்னை: பெசன்ட் நகர் வேளாங்கண்ணி திருத்தல திருவிழாவை முன்னிட்டு, செப்டம்பர் 8-ம் தேதி வரை கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று மாலை தொடங்குகிறது. அடுத்த மாதம் 8ம் தேதியுடன் விழா நிறைவடைகிறது.

இதையொட்டி, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து அன்னை வேளாங்கண்ணித் திருத்தலத்துக்கு, செப்டம்பர் 8-ம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்பட உள்ளது. இந்நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE