‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ பிரச்சாரத்தால் விபத்துக்கள் குறைந்திருக்கின்றன: சென்னை போக்குவரத்து காவல்துறை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் விபத்தை பூஜ்ஜியமாக மாற்றவும், பாதுகாப்பான பெருநகரமாக மாற்றவும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ரீல்ஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை பெருநகர காவல் துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

சென்னைபெருநகர போக்குவரத்துக் காவல் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னையின் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், என்ற வாசகத்துடன் கூடிய ZAD (Zero accident day) விழிப்புணர்வு பிரச்சாரம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் தொடங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரமானது ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை 20 நாட்களுக்கு நடைபெற்றது. சென்னையில் உயிரிழப்புகளைக் குறைப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி விபத்தில்லா நாளாக மாற்றுவதே Zero Accident day வின் முக்கிய நோக்கமாகும்.

ZAD விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதன் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தவும் மற்றும் விபத்தில்லா நாளாக செயல்படுத்த வேண்டிய ஆக்கப்பூர்வமான முயற்சிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் Instagram ரீல்ஸ் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

விபத்துகளைக் குறைப்பதற்கான விழிப்புணர்வை நோக்கமாகக் கொண்டு மொத்தம் 218 ரீல்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இப்பதிவீடுகளில் உள்ளவற்றை பரிசீலனை செய்ததில் பின்வரும் நபர்கள் வெற்றியாளர்களாக கருதப்பட்டு பரிசளிக்கப்பட்டனர். 1. Highest Influencer - S. Praveen Kumar, 2. Best Creator - Sathish. G, 3. Best Catalyst - K. Sathya Sri. வெற்றி பெற்றவர்களுக்கு முறையே ரூ.2,00,000, ரூ.1,00,000 மற்றும் ரூ. 50,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரக் காலத்தில், சென்னையின் சாலைகளில் எந்த உயிரிழப்பும் ஏற்படாததால், 6 நாட்கள் ஜீரோ உயிரிழப்பு நாளாக கருதப்பட்டன. இவ்விழிப்புணர்வு பிரச்சார மாதமான ஆகஸ்டில், 2023 ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியில் நடந்த 41 உயிரிழப்பு விபத்துகளுடன் ஒப்பிடுகையில், மொத்தம் 28 இறப்புகள் இன்று வரை பதிவாகியுள்ளன. இது 13 அபாயகரமான விபத்துகளின் குறைப்பைக் காட்டுகிறது, அதாவது பிரச்சார காலத்தில் 13 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வரை உள்ள மரண விபத்துகளில் 31.7% குறைவாக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு பிரச்சார காலத்தில், கடந்த ஆண்டை விட சென்னையில் விபத்துகள் பெருமளவு குறைந்துள்ளன. ஆகஸ்ட் 2024 இல், கடந்த ஆண்டு இதே காலத்தில் 146 விபத்துக்கள் பதிவாகிய நிலையில், மொத்தம் 56 விபத்துகள் கடுமையான காயங்களுடன் பதிவாகியுள்ளன. இது 90 விபத்துக்களைக் குறைப்பதற்கு வழிவகுத்துள்ளது, கடுமையான விபத்துகளில் 61.6% குறைந்துள்ளது. போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதால் ஏற்படும் விபத்துகள் கடுமையான காயங்களிலிருந்து எளிய காயங்களுக்கு நேரடியாக வழிவகுத்துள்ளது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால், மேலும் இந்த செய்தியை முடிந்தவரை பரப்பவும், சென்னையில் விபத்தை பூஜ்ஜியமாக மாற்றவும், சாலை விபத்துகளைப் பொறுத்தமட்டில் பாதுகாப்பான பெருநகரமாகவும் மாற்றுமாறும் சென்னை பெருநகர காவல் துறையின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE