குளத்தை ஆய்வு செய்ய வந்த கிரண்பேடியை முற்றுகையிட்ட காங்கிரஸார்: புதுச்சேரியை விட்டு வெளியேற வலியுறுத்தி கோஷம்

புதுச்சேரியில் இலவச அரிசி திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் தடைபோடுவதாகக் கூறியதால், ஆயி குளத்தை ஆய்வு செய்ய சென்ற கிரண்பேடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தூய்மையாக இல்லாத கிராமங்களுக்கு இலவச அரிசி கிடையாது என சில தினங்களுக்கு முன்பு கிரண்பேடி அறிவிப்பு வெளியிட்டார். பின்னர் பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தன்னுடைய அறிவிப்பை திரும்பப் பெற்றார்.

இந்நிலையில் கிரண்பேடியின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அருகே முத்திரப்பாளையத்தில் உள்ள ஆயி குளத்தை இன்று ஆய்வு செய்ய சென்று கிரண்பேடியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். கிரண்பேடியை புதுச்சேரியைவிட்டு வெளியேற வலியுறுத்தி கோஷமிட்டனர்.

காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி கிரண்பேடி தொடர்ந்து அந்தப் பகுதியில் தன்னுடைய ஆய்வைத் தொடர்ந்தார். இதனிடையே போலீஸாரின் தடுப்புகளை மீறி குளத்தை ஆய்வு செய்து கொண்டிருந்த கிரண்பேடியை நோக்கி காங்கிரஸார் செல்ல முயற்சித்தனர். இதனால் போலீஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்