டிஎன்பிஎஸ்சி பொறியியல் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு: நேர்முகத் தேர்வுக்கு 644 பேர் அனுமதி

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வின் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதனடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு 644 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.ஜான் லூயிஸ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் உள்ளடக்கிய பதவிகளில் 358 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த ஜனவரி 6 மற்றும் 7-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த கட்டதேர்வான நேர்முகத்தேர்வுக்கு 644 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம், என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE