நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இரு மாணவிகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி, கல்லூரி மாணவி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் தாமிரபரணி ஆற்றில் குடும்பத்தினருடன் குளித்த சிவகாசியை சேர்ந்த முருகன் மகள்கள் கல்லூரி மாணவி மேனகா (18), 11 -ம் வகுப்பு மாணவி சோலை ஈஸ்வரி (15) மற்றும் அவர்களது உறவினர் சங்கரேஸ்வரன் (40) ஆகிய மூவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். மாரிஸ்வரன் என்ற இளைஞர் மீட்கப்பட்டுள்ளார். கல்லிடைக்குறிச்சி போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE