ஆம்ஸ்ட்ராங் கொலை: நாகேந்திரனுக்கு 3 நாள் போலீஸ் காவல்

By செய்திப்பிரிவு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் வட சென்னையைச் சேர்ந்த ரவுடி நாகேந்திரனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்றுஅவர் எழும்பூர் 5-வது நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீசன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தனிப்படை போலீஸார், நாகேந்திரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரினர்.

அப்போது நாகேந்திரன், “நானும், கொலையான ஆம்ஸ்ட்ராங்கும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் விரோதம் இருந்ததில்லை. அரசியல் காரணங்களுக்காக என்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளனர்” என அழுதபடி நீதிபதியிடம் முறையிட்டார்.

விசாரணைக்குப் பின்பு, நாகேந்திரனை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, எழும்பூரில் உள்ள ரவுடிகள் தனிப்பிரிவு அலுவலகத்தில் வைத்து நாகேந்திரனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்