ஆக.16-ல் சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் வரும் ஆக.16-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் ஆக.16ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும். இக்கூட்டத்தில், முப்பெரும் விழா குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எனவே, மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE