உதகை: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஆனைகாயம் பாண்டிக்காடு பகுதியில் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தான்.
மலப்புரம் மாவட்டத்தை ஒட்டி நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளதால், சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நெல்லியாளம், தாளூர், அம்பலமூலா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது சுகாதார நிலைய மருத்துவர்கள், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் பாலுசாமி கூறும் போது, “காய்ச்சல், சிவப்பு தடிப்புகள், மூளை காய்ச்சல் மற்றும் வலிப்பு நோயுடன் யாராவது வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி, உரிய சிகிச்சை அளிப்பதுடன், உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும்” என்றார்.