முகூர்த்த தினம்: தமிழகத்தில் நாளை பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள்

By கி.கணேஷ்

சென்னை: ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த தினமான நாளை (ஜூலை 12) பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுபமுகூர்த்த தினங்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும். எனவே, அந்த நாட்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுகிறது. தற்போது ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான ஜூலை 12-ம் தேதி நாளை அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்க பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

எனவே, நாளை ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 முன்பதிவு டோக்கன்கள், 2 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதில் 300 டோக்கன்கள், அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்களுடன், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தத்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 டோக்கன்களும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE