உயிருடன் உள்ள நபர் இறந்ததாக அறிக்கை: வெளிநாடு வாழ் ஆணையருக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: உயிருடன் இருக்கும் நபரை இறந்ததாக அறிக்கை அளித்தது தொடர்பாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழரான கிருஷ்ணகுமார் என்பவரை, உறவினர்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக் கோரி, அவரது உறவினர் தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆணையருக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், கிருஷ்ணகுமார் இறந்துவிட்டதாக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதை மறுத்த கிருஷ்ணகுமாரின் உறவினரான நாகேஸ்வரி, கிருஷ்ணகுமார் உயிருடன் இருக்கும் நிலையில் அவர் இறந்துவிட்டதாக கூறி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும், உடனடியாக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று (ஜூன்.27) விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, உயிரோடு இருக்கும் நபரை இறந்ததாக எப்படி அறிக்கை அளிக்கலாம் எனக் கேள்வி எழுப்பி, இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 16-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

18 mins ago

ஜோதிடம்

15 mins ago

ஓடிடி களம்

10 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

29 mins ago

ஜோதிடம்

37 mins ago

தமிழகம்

44 mins ago

விளையாட்டு

35 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்