கீழடி 10-ம் கட்ட அகழாய்வில் பல வண்ண கண்ணாடி மணிகள் கண்டெடுப்பு

By செய்திப்பிரிவு

திருப்புவனம்: கீழடியில் பல வண்ணங்களில் கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற அகழாய்வுகள் மூலம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரீகம் இருந்துள்ளது கண்டறியப்பட்டது. ஏற்கெனவே 9 கட்ட அகழாய்வு பணிகள் மூலம் பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில், 10-ம் கட்ட அகழாய்வு பணியை ஜூன் 18-ம் தேதி கீழடி, கொந்தகை ஆகிய 2 இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடியே காணொலி மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கீழடியில் 2 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக சில அடி ஆழத்திலேயே பல வண்ணங்களில் கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை 27 மணிகள் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். விரைவில் கொந்தகையில் அகழாய்வுப் பணி தொடங்கப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்