ராகுல் காந்தியின் விடாமுயற்சி காங்கிரஸை கரை சேர்க்கும்: செல்லூர் ராஜு கருத்து

By செய்திப்பிரிவு

மதுரை: ராகுல் காந்தியின் விடாமுயற்சி காங்கிரஸை கரை சேர்க்கும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. இடைத்தேர்தல் முறையாக நடக்காது என்பதால் நாங்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. பாமக தங்களுக்கு எவ்வளவு வாக்குகள் இருக்கிறது என்பதை அறியவே, தேர்தலில் போட்டியிடுகிறது. வெற்றிபெற மாட்டோம் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ராகுல் காந்தி மாற்றான் தோட்டத்து மல்லிகை. அவருக்கு விடாமுயற்சி உண்டு. அந்த முயற்சி காங்கிரஸ் கட்சியை கரை சேர்க்கும். இதை ராகுல் காந்தியும் உணர்ந்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற மமதையில் திமுக பேசிக்கொண்டிருக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்தக் கட்சி கூட்டணியும் இல்லாமல் திமுக தனித்து நிற்கத் தயாரா?

இவ்வாறு செல்லூர் கே.ராஜூ கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE