சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க கோவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

By இல.ராஜகோபால்

கோவை: சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டார். தேர்தலில் திமுக வெற்றியை கொண்டாட நாளை நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக உதயநிதி ஸ்டாலின் கோவை வந்தார்.

மாலை ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்ட ஆட்சியர், நிலம் தொடர்பான விவரங்களை அவரிடம் வரைபடத்துடன் தெரிவித்தார். தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா உள்ளிட்ட பலர் ஆய்வின் போது உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE