மத்திய சென்னை பாஜக வேட்பாளர் மோடியிடம் மன்னிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களவை தேர்தலில் பாஜக பல்வேறு தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், பாஜக சார்பாக மத்தியசென்னை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் தோல்வியடைந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ``மன்னித்து விடுங்கள் பிரதமர் மோடி. நான் உங்களை தலைகுனிய வைத்துவிட்டேன். எனினும் தொடர்ந்து போராடி உங்களது திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்வேன். மாற்றம் வெகு தொலைவில் இல்லை.

இந்த மக்களவை தேர்தலில் திமுக வாரிசான அமைச்சர் உதயநிதியையும் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவையும் எதிர்த்து அவர்களது கோட்டையில் நம்பகமான வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளோம். மத்திய சென்னை தொகுதியில் பணியாற்றிய பாஜக நிர்வாகிகள் அனைவருக்கும் என் நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE