ரயில்வே மின் பாதையில் தொழில்நுட்ப கோளாறு: பரங்கிமலை - பழவந்தாங்கல் இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பரங்கிமலை - பழவந்தாங்கல் இடையே ரயில் பாதையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், மின்சார ரயில் சேவை நேற்று மாலை ஒன்னே கால் மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினசரி பயணம் செய்து வருகின்றனர். அதிலும், காலை, மாலை வேளைகளில் மின்சார ரயில்களில் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில், பரங்கிமலை - பழவந்தாங்கல் இடையே ரயில் தடத்தில் உயர்மட்ட மின்பாதையில் நேற்று மாலை 5.30மணிக்கு திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

உயர்மட்ட மின்பாதை: தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், ரயில்வே பொறியாளர்கள், பணியாளர்கள் அங்கு விரைந்து வந்து, உயர்மட்ட மின்பாதையில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அதேநேரம், கடற்கரை - தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன.

இதற்கிடையில், பரங்கிமலை - பழவந்தாங்கல் இடையே ரயில்வே மின்பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு நேற்று மாலை 6.45 மணிக்கு சரி செய்யப்பட்டது. இதையடுத்து, தாம்பரம் - சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் சேவை மீண்டும் இயங்கத் தொடங்கின. தொழில்நுட்ப கோளாறால், 1.15 மணி நேரம் வரை ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்