11-வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்து முன்னிலை @ ஸ்ரீபெரும்புதூர்

By பெ.ஜேம்ஸ் குமார்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் 11 முடிந்துள்ள நிலையில் திமுக வேட்பாளர் 1,84,361 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வாகிக்கிறார்.

ஸ்ரீ பெரும்புதூர் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 23,58,526, ஆண் வாக்காளர்கள்: 11,69,344. பெண் வாக்காளர்கள்: 11,88,754. மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 428. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் இத்தேர்தலில் மொத்தம் 14,35,243 (60.25%) வாக்குகள் பதிவாகின. இதில் திமுக, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட மொத்தம் நோட்டாவை சேர்த்து 32 பேர் போட்டியிடுகின்றனர். இதில் மொத்தம் 32 சுற்றுக்களில் 11 சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது.

இதில் வேட்பாளர்கள்: திமுக - டி.ஆர்.பாலு:- 2,95,576 வாக்குகளும், அதிமுக - பிரேம்குமார் : 1,11,215, த.மா.க - வேணுகோபால் - 75,017, நாம் தமிழர் - ரவிச்சந்திரன் : 58,093, நோட்டா - 10,070 வாக்குகள் பெற்றுள்ளன. திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு 1,84,361 தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE