கருணாநிதியின் 101-வது பிறந்தநாள்: திருக்குவளையில் திமுகவினர் மரியாதை

By கரு.முத்து

திருவாரூர்: மறைந்த முன்னாள் முதல்வரும், திருக்குவளையில் பிறந்தவருமான மு.கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு நாகை மாவட்டம் திருக்குவளையில் அவர் பிறந்த இல்லத்தில் உள்ள மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழா நாகை மாவட்டம் திருக்குவளையில் அவர் பிறந்த இல்லத்தில் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மார்பளவு சிலைக்கு நாகை மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் அங்குள்ள அவரது தந்தை முத்துவேலர், தாயார் அஞ்சுகம், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து திருக்குவளை கடைவீதி பகுதியில் நீர் மோர் பந்தல் திறந்து, பொதுமக்களுக்கு இனிப்புகளுடன் இளநீர், தர்பூசணி ஆகியவை வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து திருக்குவளை கருணாலயா முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு திமுக இளைஞரணி சார்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டது. இவற்றில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE