கோவை: யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் மே 30-ம் தேதிக்கு தள்ளிவைத்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெண் போலீஸாரை அவதூறாகப் பேசியதாக முசிறி டிஎஸ்பி யாஸ்மின், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் அளித்த புகாரின் பேரில், யூடியூபர் சவுக்கு சங்கர் மீதும், அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் ஃபெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
விசாரணைக்குப் பிறகு அவர் திருச்சி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனிடையே, ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 4-ல் திங்கள்கிழமை (மே 27) விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் மனு விசாரணையை வரும் மே 30-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார். அதேபோல, சவுக்கு சங்கர் ஜாமீன் மனுவும் விசாரணைக்கு வந்தது. ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் மே 30-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
33 mins ago
இணைப்பிதழ்கள்
40 mins ago
தமிழகம்
29 mins ago
இந்தியா
15 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago