குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தேர்வுக்கு புதிய பாடத்திட்டம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ முதன்மைத் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை தமிழக அரசுப் பணியாளார் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சியின் 2024-ம் ஆண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வுக்கால அட்டவணை கடந்த ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது, தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ தேர்வுக்கு தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக குரூப்-2 மற்றும் குரூப்-2 முதன்மைத்தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் பின்வரும் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
www.tnpsc.gov.in/English/scheme.html மற்றும் www.tnpsc.gov.in/English/syllabus.html , என்று அவர் கூறியுள்ளார்.

புதிய பாடங்கள் சேர்ப்பு: புதிய பாடத்திட்டத்தின்படி, குரூப்-2 முதன்மைத் தேர்வில் ஏற்கெனவே உள்ள பாடத்திட்டத்துடன் புதிதாக தமிழ் கலாச்சாரம், பண்பாடு, தொல்லியல்துறை ஆய்வுகள், திருக்குறள், சங்க இலக்கியம், தமிழகத்தில் நடந்த விடுதலை போராட்டங்கள், இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலை தொடர்பான பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல் குரூப்-2 -ஏ முதன்மைத் தேர்வு பாடத்திட்டத்தில் தமிழக நவீன வரலாறு, தமிழ் கலாச்சாரம், பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், சங்க இலக்கியம், தமிழக விடுதலை போராட்டங்கள், நுண்ணறிவுத்திறன், ரீசனிங் உள்ளிட்டவை தொடர்பான பாடங்களும் இடம்பெற்றுள்ளன. குரூப்-2 முதன்மைத்தேர்வு விரிவாக விடையளிக்கும் வகையிலும், குரூப்-2ஏ முதன்மைத்தேர்வு கொள்குறி வகையிலும் (அப்ஜெக்டிவ் டைப்) அமைந்திருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்