விசிக தலைவர் திருமாவளவனுக்கு பெங்களூருவில் சிகிச்சை

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கால் வீக்கத்துக்காக பெங்களூருவில் சிகிச்சை பெறுவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: மக்களவைத் தேர்தலை யொட்டி, தொடர்ந்து பிரச்சாரம் செய்ததால் கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக பெங்களூரு வந்திருக்கிறேன். ஓரிரு நாட்களில் குணமாகும் என மருத்துவர்கள் கூறி யிருக்கின்றனர். சென்னையில் வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளவிசிக விருது வழங்கும் விழாவுக்கு அனைத்து பொறுப்பாளர் களும் கட்டாயம் வர வேண்டும்.

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகின்றன. விழாவானது, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடை பெறுகிறது.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE