சென்னை | பராமரிப்பு பணி: சில மின் ரயில்கள் ரத்து

By செய்திப்பிரிவு

சென்னை: செங்கல்பட்டு யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சில மின்சார ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யட்டுள்ளது.

இதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே காலை 9.25, 10 மணி மற்றும் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே காலை 11.30, நண்பகல் 12 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாளை(12-ம் தேதி) சிங்கப்பெருமாள்கோயில் - சென்னை கடற்கரைஇடையே ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE