ரிப்பன் மாளிகை போக்குவரத்து சிக்னலில் மாநகராட்சி சார்பில் நிழற்பந்தல், தண்ணீர் பந்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை அருகில் உள்ளபோக்குவரத்து சிக்னலில் நிழற்பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க மாநகராட்சி சார்பில் முதல்கட்டமாக 10 போக்குவரத்து சிக்னல்பகுதிகளில் பசுமை நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ரிப்பன் மாளிகை அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் அமைக்கப்பட்ட நிழற்பந்தலை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்து, பந்தலின் நிழலில் நின்ற வாகன ஓட்டிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவல்துறை உதவியுடன் முதற்கட்டமாக 10 இடங்களில் நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.இந்தப் பந்தல்கள் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெரிய வாகனங்கள் செல்லும் வகையில் 5.30 மீ. உயரத்தில் போரஸ் துணி போட்டு நிழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து மண்பானைகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் வரவேற்பை பொருத்து இதர பகுதிகளிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களிலும் அத்துறையுடன் இணைந்து நிழற்பந்தல் அமைக்கப்படும். மழை காலங்களிலும் இதேபோன்று அமைக்க திட்டமிட்டிருக்கிறோம்.

மேலும், மருத்துவப் பணியாளர்களின் மேற்பார்வையில் 299 இடங்களில் ஓஆர்எஸ்கரைசல் வழங்கப்பட்டு வரு கிறது. இதுவரை 1.44 லட்சம் பேருக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்