பிளஸ் 2 தேர்ச்சி விகிதம்: முதலிடத்தில் திருப்பூர், கடைசி இடத்தில் திருவண்ணாமலை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாநிலத்திலேயே திருப்பூர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகமாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைவாகவும் பதிவாகியுள்ளது.

முதல் 5 இடங்களைப் பிடித்த மாவட்டங்கள்: 1. திருப்பூர் (97.45%), 2. சிவகங்கை (97.42%), ஈரோடு (97.42%), 3. அரியலூர் (97.25%), 4. கோவை (96.97%) 5.விருதுநகர் (96.64%) ஆகிய மாவட்டங்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. இந்த ஆண்டு இரண்டாம் இடத்தை சிவகங்கை, ஈரோடு என 2 மாவட்டங்கள் பிடித்துள்ளன.

மாநிலத்திலேயே மிகக் குறைவாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 90.47 சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. தலைநகர் சென்னையில் 87.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழகத்தில் மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92.37% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். புதுச்சேரியில் 93.38 சதவீதம் பேரும். காரைக்காலில் 87.03 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்