தமிழக அரசின் கணக்கு தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: 2022 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை தமிழக ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுக் கூறு151(2)-ன் படி, இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி, தமிழ்நாடு அரசின் கணக்குகள் மீதான தனது தணிக்கை அறிக்கைகளை மாநில சட்டமன்றத்தின் முன் வைக்க ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதன்படி, 2022 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின்இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கையை பேரவையில் சமர்ப்பிப்பதற்காக நேற்றுமுன்தினம் தமிழக ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது என முதன்மை தலைமை கணக்காயர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE