வாக்களிக்க சென்றவர்கள் ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி வாக்களிக்கச் சென்றவர்கள் ஊர்திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் நேற்றுமுதல் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 17, 18-ம் தேதிகளில்சென்னையில் இருந்து 7,299 பேருந்துகள் இயக்கப்பட்டன.

குறிப்பாக தேர்தலுக்கு முந்தைய நாளான ஏப்.18-ல் 2,092 பேருந்துகளும், 2,308 சிறப்புப் பேருந்துகளும் ஆக மொத்தம் 4,400 பேருந்துகளில் 2 லட்சத்து 55,000 பேர் சென்னையில் இருந்து பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், ஊர் சென்றவர்கள் திரும்புவதற்கான சிறப்பு பேருந்துகள் நேற்றுமுதல் இயக்கப்படுகின்றன. அதன்படி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்துசென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 260 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதில் தேவையான அளவு பேருந்துகள் இயக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேபோல், சென்னையைத் தவிர்த்து முக்கிய பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 400 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு, தேவையான பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்றைய தினம் தமிழகம் முழுவதும் பயணிக்க 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

மேலும், முன்பதிவு செய்யாதவர்களும் பயணம் செய்யும் வகையில் சென்னைக்கு 1,565 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு பகுதிகளுக்கு 1,895 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்