“எனது சின்னம் ‘மைக்’ இல்லாமல் யாரும் ஓட்டு கேட்க முடியாது” - சீமான் பேச்சு @ சிவகாசி

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: “எனது சின்னமான மைக் இல்லாமல் எந்தத் தலைவரும், எந்தச் சின்னத்துக்கும் வாக்கு கேட்க முடியாது. மைக் முன் நின்று வாக்கு கேட்பதால் அனைவரும் எனக்குத்தான் வாக்கு சேகரிக்கின்றனர்” என சீமான் தெரிவித்துள்ளார்.

சிவகாசி அருகே திருத்தங்கல் அண்ணா சிலை முன்பு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விருதுநகர் தொகுதி வேட்பாளர் கௌசிக்கை ஆதரித்து மாலை பிரச்சாரம் செய்தார். அப்போது சீமான் பேசுகையில், “பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட மற்றும் அரசியல் அங்கீகாரம் இல்லாத சமூகத்தினருக்கு தேடித் தேடி வாய்ப்பளிப்பது நாம் தமிழர் கட்சி மட்டும் தான்.

எனது சின்னமான மைக் இல்லாமல் எந்தத் தலைவரும், எந்தச் சின்னத்துக்கும் வாக்கு கேட்க முடியாது. மைக் முன் நின்று வாக்கு கேட்பதால் அனைவரும் எனக்குத்தான் வாக்கு சேகரிக்கின்றனர்.

என்.ஐ.ஏ சோதனையால் இளைஞர்கள் பலர் என்னை நோக்கி வருவதற்கு அச்சப்படுகின்றனர். அதையும் தாண்டி கௌசிக் போன்றவர்கள் லட்சியம் தான் முக்கியம் என என்னை நோக்கி வருகின்றனர்.

மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள் என படித்தவர்களை தேடி பிடித்து வேட்பாளராக நிறுத்தியுள்ளேன். அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்” என்றார். இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், வேட்பாளர் கௌசிக் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE