அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் பிளஸ்-2 தேர்வெழுத ஆன்லைனில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் வரும் 25-ந்தேதி முதல் ஹால் டிக்கெட்டுகளை தேர்வுத்துறையின் இணையதளத் தில் (www.tndge.in) பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இணையதளத்தில் விண்ணப்ப எண்ணையும், பிறந்த தேதியையும் குறிப்பிட வேண்டும்.
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடங்கிய பாடங்களில் செய்முறைத்தேர்வில் 40 மதிப் பெண்ணுக்கு குறைவாகப் பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப் பாக செய்முறைத் தேர்வை மீண்டும் செய்ய வேண்டும். அத்துடன் எழுத்துத்தேர்வையும் எழுத வேண் டும். அதிகபட்சம் 200 மதிப்பெண் கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத்தேர்வில் பங்கேற்க வேண்டும்.
முதன்முதலாக பிளஸ்-2 தேர் வெழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் (எச்.பி. வகை) பகுதி-1, பகுதி-2 மொழிப்பாடத்தின் தாள் 2 மற்றும் பகுதி-3-ல் சிறப்பு தமிழ் எழுதும் தேர்வர்கள் கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை கண்டிப்பாகச் செய்ய வேண்டும். இதற்கான திறன் தேர்வுகள் மற்றும் செய்முறைத்தேர்வுக்கான தேதி விவரங்களை தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி தெரிந்துகொள்ள வேண் டும். சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பிப்பதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago