திருநெல்வேலிக்கு இன்று சிறப்பு ரயில்

By செய்திப்பிரிவு

சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தென்மாவட்ட ரயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துவருகிறது.

அதன்படி, சென்னை எழும்பூர் -திருநெல்வேலி இடையே இன்று (23-ம் தேதி) சிறப்புரயில் (வண்டி எண்.06051) இயக்கப்படுகிறது. இந்த ரயில், எழும்பூரில் இருந்துஇரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

மறுமார்க்கத்தில், இந்த ரயில் (06052) வரும் 25-ம் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்