மார்ச் 18-ல் மதிமுக நிர்வாகக் குழு, ஆட்சிமன்றக் குழு கூட்டம்

By செய்திப்பிரிவு

மதிமுக நிர்வாகக் குழு, ஆட்சிமன்றக் குழு கூட்டம் வரும் 18-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் வரும் 18-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, எழும்பூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெறும். தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் அவைத் தலைவர் தலைமையில் நடைபெறும்.

இக்கூட்டங்களில் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, தணிக்கைக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மையம், ஆகிய அமைப்புகளின் செயலாளர்கள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள், அணிகளின் செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்பார்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE