பெரம்பலூர் தொகுதி உறுதி: மேலும் 3 கேட்கும் ஐஜேகே

By செய்திப்பிரிவு

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயக கட்சிக்கு உறுதியாகி இருப்பதாகவும், மேலும் 3 தொகுதிகளை பெற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தென்சென்னை ஆகிய தொகுதிகளை முதலில் கேட்டிருந்தது. இவற்றில் பெரம்பலூர் உறுதியாக கிடைக்கும் என்று அக்கட்சியினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பெரம்பலூர் தொகுதி உறுதியாகி இருப்பதாகவும், மேலும் 3 தொகுதிகளை பெற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் போட்டியிட உள்ளார். இதுதவிர, கள்ளக்குறிச்சி, தென்சென்னை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளோம். எங்கள் கட்சிக்கு வேறு தொகுதிகள் உறுதியான பிறகு முறைப்படி அறிவிக்கப்படும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE