‘ஓரிரு நாளில் பாஜக - ஓபிஎஸ் - டிடிவி கூட்டணி முடிவு’ - ரவீந்திரநாத்

By செய்திப்பிரிவு

இன்னும் ஓரிரு நாட்களில் பாஜக-ஓபிஎஸ்-டிடிவி கூட்டணி முடிவு செய்யப்படும்என்று தேனி மக்களவை உறுப்பினரும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனுமான ரவீந்திரநாத் கூறினார்.

மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இன்னும் ஓரிரு நாட்களில் பாஜக-ஓபிஎஸ்-டிடிவி கூட்டணி முடிவு செய்யப்படும்.

பிரதமர் மீண்டும் தமிழகம் வருவதற்குள்ளாக, கூட்டணி குறித்து முடிவாக வாய்ப்புள்ளது. நாங்கள் தனித்துப் போட்டியிட வாய்ப்பில்லை. மீண்டும் பிரதமராக மோடிதான் வரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம். தென் மாவட்டங்களில் எந்த மக்களவைத் தொகுதியிலும் நான் போட்டியிடத் தயாராக இருக்கிறேன்.

திண்டுக்கல்-லோயர் கேம்ப் வரை 123 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். விரைவு ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE