தொகுதி பங்கீடு: ஸ்டாலின் ஆலோசனை

By செய்திப்பிரிவு

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை அண்ணா அறிவாலயம் வந்தார். அப்போது, திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் ஏற்பாட்டின் பேரில், திருவள்ளூர் நகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் வி.இ.ஜான் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் 5 பேர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அதைத்தொடர்ந்து, சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஆர்.டி.சேகர் எம்எல்ஏ, பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெகதீசன் ஆகியோர் முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பின்னர், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, செய்தித்தொடர்பு பிரிவு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளி்ட்ட நிர்வாகிகளுடன், தொகுதிப் பங்கீட்டுப் பணிகள், நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார். இதில், தொகுதி பங்கீட்டை விரைவாக முடித்து, அடுத்த கட்ட பிரச்சாரப் பணிகளில் கவனம் செலுத்தும்படி நிர்வாகிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE