மார்ச் 3-க்கு பின் திமுகவுடன் தொகுதி உடன்பாடு: இ.கம்யூனிஸ்ட் தகவல்

By செய்திப்பிரிவு

தொகுதி பங்கீடு தொடர்பாக நேற்று திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. அக்கட்சி சார்பில் மாநில துணை செயலாளர்கள் கே.சுப்பராயன் எம்.பி., மு.வீர பாண்டியன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

2019 தேர்தலில் திருப்பூர், நாகை தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் கூடுதலாக தென்காசி தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டிருந்தது. இதுகுறித்து, கே.சுப்பராயன் எம்.பி. கூறும்போது, ‘‘இந்த முறை ஒரு தொகுதி கூடுதலாக கேட்டுள்ளோம். மார்ச் 3-ம் தேதிக்குப் பிறகு தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் நிறைவேறும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்