தீவுத்திடல் கண்காட்சி: 42 நாளில் 4.79 லட்சம் பேர் வருகை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை தீவுத்திடல் கண்காட்சிக்கு 42 நாட்களில் 4.79 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். சென்னை தீவுத்திடலில் 48-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி, கடந்த ஜனவரி 14-ம் தேதி தொடங்கியது. 70 நாட்கள் நடைபெறும் சுற்றுலா கண்காட்சியில் 51 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 32-க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள், நவீன கேளிக்கை சாதனங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சி, நாட்டுபுற கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

பொருட்காட்சியை நேற்று முன்தினம் (24-ம் தேதி) 12,793 பேர் பார்வையிட்டுள்ளனர். கடந்த42 நாட்களில் 3,99,892 பெரியவர்கள், 79,101 சிறியவர்கள் எனமொத்தம் 4,78,993 பேர் பொருட்காட்சியை பார்வையிட்டுள்ளனர் என சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE