ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம்: அமைச்சர் முத்துசாமி தகவல்

By செய்திப்பிரிவு

ஈரோடு: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோட்டில் உள்ளூர் திட்டமிடல்ஆணையத்தின் (டிடிசிபி) மாஸ்டர் பிளான் இணையதள சேவைதொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த சேவையைத் தொடங்கிவைத்த அமைச்சர் முத்துசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் விலக்கப்பட்ட பகுதிகளை, மீண்டும் சேர்ப்பது குறித்த பொதுமக்களின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும். 2016-ம் ஆண்டுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை முறைப்படுத்த பிப்ரவரி 29-ம்தேதி கடைசி நாளாகும். அங்கீகாரம் பெறாத மனைகளின் உரிமையாளர்கள் 10 சதவீத நிலத்தை அரசிடம் ஒப்படைத்து, உரிய அனுமதியைப் பெறலாம்.

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும். கட்டிடங்களின் உயரத்தை 12 மீட்டரிலிருந்து 14 மீட்டராக அனுமதிக்க வேண்டும் என்றகோரிக்கை அனுமதிக்கப்படுகிறது. திறந்தவெளி இருப்பு விதிமுறைகளில் எந்த தளர்வும் செய்யப்பட மாட்டாது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, டிடிசிபி உதவி இயக்குநர் ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE