“அண்ணாமலை ஸ்லீப்பர் செல்” - துரை வைகோ

By செய்திப்பிரிவு

சென்னை: “அண்ணாமலை ஒரு ஸ்லீப்பர் செல்” என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக சார்பில் இளையோர் தேர்தல் பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் ஸ்லீப்பர் செல். காரணம் பாஜக அதிமுக கூட்டணியை உடைத்து எதிர் கட்சிகளின் வலிமை இழக்க செய்துவிட்டார்.

அதனால் தான் அவரை நான் திமுகவின் ஸ்லீப்பர் செல் என்று சொல்கிறேன்” என்றார். மேலும், தேர்தல் நேரத்தில் எவ்வாறு விழிப்புடண் கடமையாற்ற வேண்டும், பூத் கமிட்டிகளில் இருக்கும் தோழர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் மிக நேர்த்தியாக விவரித்தார் துரை வைகோ.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE