தென்காசியில் இளைஞரை போலீஸார் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரல்

By செய்திப்பிரிவு

தென்காசி: தென்காசியில் இளைஞர் ஒருவரை காவலர் அடித்து, நெஞ்சில்மிதிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இரவு ரோந்து பணியில் இருந்துள்ள காவலர்கள் அந்தப் பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை அடித்து, இழுத்து தரையில்போட்டு, அவரது நெஞ்சில் காலால்மிதிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவுகிறது.

இந்நிலையில் தென்காசி மங்கம்மாள் சாலையை சேர்ந்த ஜோசப்ரவி மகன் ஆன்ஸ்டன் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நேற்று அனுப்பியுள்ள மனு:

தென்காசி பேருந்து நிலையத்தில் கடந்த 14-ம் தேதி இரவு 10.30 மணிக்கு நானும் எனது நண்பர்கள் விஷ்ணு, முகம்மது காசிம்ஆகியோர் நின்று கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்தபோலீஸார் எங்களை தாக்கியதுடன், அவதூறாக பேசினர். என்னை அடித்து கீழேதள்ளி, ஷூ காலால் ஓங்கி மிதித்தார்கள்.

இதனால் மயக்கமடைந்த என்னை போலீஸாரே 108 ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். என்னை அடித்து கொடூரமாக தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE