தமிழகத்தில் இன்று 9 டிகிரி வரை வெயில் அதிகரிக்க வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 21-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவவாய்ப்பு உள்ளது. இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்சவெப்பநிலை வழக்கத்தைவிட4 முதல் 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 73 டிகிரி முதல் 90 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.

பிப். 15-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 99 டிகிரி, நாமக்கல்லில் 96 டிகிரி, மதுரையில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத், புனே, வாராணசி, சிம்லா, கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில் அனல் காற்றின் விளைவு தொடர்பாக ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள், சர்வதேசசுற்றுச்சூழல் இதழில் 2 வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

‘சென்னை, டெல்லி உள்ளிட்ட 10 நகரங்களில் வரும்மாதங்களில் அனல் காற்றின்தாக்கம் அதிகமாக இருக்கும்.அதிக சராசரி வெப்பநிலையானது ஒரு வருடத்தில் 97% நாட்களுக்கு மேல் இருக்கும். இந்தியாவில் பல நகரங்களில் மார்ச் முதல் ஜூன் வரை அனல் காற்றின் தாக்கம் இருக்கும். சில நகரங்களில் இது ஜூலை வரை நீடிக்கும்’ என்று அந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE