ரயில் ஓட்டுநர்கள் சென்னையில் உண்ணாவிரதம்

By செய்திப்பிரிவு

சென்னை: ரயில் ஓட்டுநர்களின் பணி நேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளிகள் (ரயில் ஓட்டுநர்கள்) சங்கம் சார்பில், சென்னை, சேலம், மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 5 கோட்டங்களில் பல்வேறு இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது.

சென்னை போராட்டத்தில் அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளிகள் சங்கத்தின் மத்திய அமைப்பு செயலாளர் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE