அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைக்கு பிப்.29-க்குள் விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த வரும் பிப்.29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி, வீட்டு வசதித்துறை செயலர் சி.சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனுமதியற்ற மற்றும் வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் கடந்த 2016-ம் ஆண்டு அக். 20-ம் தேதி அல்லது அதற்கு முன் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளையும் வரன்முறைப்படுத்த, 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் இம்மாதம் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இந்த இறுதிவாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE