சென்னையில் ‘காவல் கரங்கள்’ உதவி மையம் மூலம் இதுவரை 6,178 ஆதரவற்றோர் மீட்பு

By செய்திப்பிரிவு

சென்னை: இதுவரை காவல் கரங்கள் உதவி மையம் மூலம் மொத்தம் 6,178 வீடற்ற ஆதரவற்ற நிலையில் இருந்த ஆண் மற்றும் பெண் நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,427 நபர்களை காப்பகங்களில் தங்க வைத்தும். 960 நபர்கள் அவர்களது குடும்பத்துடன் சேர்த்து கைக்கப்பட்டுள்ளனர் என்று சென்னைப் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை பெருநகர காவல் துறையில் காவல்கரங்கள் உதவி மையம் கடந்த 21.04.2011 அன்று 9444717100 என்ற எண்ணில் (24×7) "மனிதம் போற்றுவோம்" மற்றும் "மனித நேயம் காப்போம்" என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்டு சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நயர்களை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்களை தன்ணர்வலர்களின் உதவியுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை காவல் கரங்கள் உதவி மையம் மூலம் மொத்தம் 6,178 வீடற்ற ஆதரவற்ற நிலையில் இருந்த ஆண் மற்றும் பெண் நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,427 நபர்களை காப்பகங்களில் தங்க வைத்தும். 960 நபர்கள் அவர்களது குடும்பத்துடன் சேர்த்து கைக்கப்பட்டுள்ளனர், 587 நபர்கள மன நல மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

அரசு மருத்துமைனையில் 204 நபர்கள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்றும் வருகிறார்கள். மேலும் உரிமை கோரப்படாத 3,205 இறந்த அனாதை உடல்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் உரிய முறையில் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்தும் சென்னை பெருநகர காவல் கரங்கள் உதவி மையம் மூலம் உதவி செய்து பெரும்பங்காற்றி வருகிறது.

சென்னை பெருநர காவல் கரங்கள் உணவு உதவி வாகனம் மூலம் 1,41,488 உணவு பொட்டலங்கள் நன்கொடையாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு, ஆதரவற்ற நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள காப்பகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE