இலவச வேட்டி விவகாரத்தில் ரூ.60 கோடி முறைகேடு: பாஜக சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்

By செய்திப்பிரிவு

சென்னை: இலவச வேட்டி விவகாரத்தில் ரூ.60 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, பாஜக சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் இலவசமாக பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதனுடன் இலவச வேட்டி,சேலையும் வழங்கப்படுகிறது.அதன்படி அண்மையில் வழங்கப்பட்ட இலவச வேட்டியில்ரூ.60 கோடிவரை முறைகேடுநடந்திருப்பதாகக் கூறி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் பாஜகமாநில தலைவர் அண்ணாமலை சார்பில், பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் நேற்று புகார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒவ்வொரு பொங்கலுக்கும் இலவச வேட்டி, சேலை வழங்குவது தமிழக அரசுதொடர்ந்து செய்து வரும் பணி.இந்த வேட்டி, சேலை நெய்வதற்கு டெண்டர் விடும்போது அது எப்படி நெய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. பொங்கலுக்கு வழங்கப்பட்ட வேட்டியில் 100 சதவீதம் பருத்திநூல் இருப்பதற்கு பதிலாக78 சதவீதம் பாலியஸ்டர் நூல்பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றம் செல்வோம்: ஒரு கிலோ பருத்தி நூல்ரூ.320 விலை இருக்கும் நிலையில் பாலியஸ்டரின் விலையோ ரூ.160 மட்டுமே; வித்தியாசம் 160ரூபாய். ஒரு வேட்டி நெய்ய 200 கிராம் பருத்தி நூல் தேவை. எனவே, 1.68 கோடி வேட்டியில் ரூ.60 கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றம் செல்வோம்.

இதுமட்டும் அல்லாமல் பருத்தி நூலுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை ரூ.320. ஆனால்,வெளிச் சந்தையில் இதன் விலை ரூ.250 மட்டுமே. இதிலும் முரண்பாடு உள்ளது. இதிலும் முறைகேடு நடந்துள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE