மின்வாரிய ஊழியருக்கான முத்தரப்பு ஒப்பந்தம்: 22 தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டன

By செய்திப்பிரிவு

சென்னை: மின்வாரியம் 2 நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான முத்தரப்பு ஒப்பந்தத்தில் 22 தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டன.

கடந்த 2010-ம் ஆண்டு தமிழ்நாடு மின்வாரியம் மின்உற்பத்தி மற்றும்மின்பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் என 2 நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது. மின்வாரியத்தில் 90 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். மின்வாரியம் தனி, தனி நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், ஊழியர்களுக்கு ஓய்வூதியம், சம்பளம், பதவி உயர்வு உள்ளிட்டஅனைத்தும் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.

இதற்காக, தமிழக அரசு, மின்வாரியம் மற்றும் தொழிற்சங்கம் இடையே முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக, மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானியின் அழைப்பை ஏற்று,மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில்மின்வாரியத்தில் உள்ள 27 சங்கநிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தில் 22 சங்க நிர்வாகிகள் கையெழுதிட்டனர்.

இந்த ஒப்பந்தத்தில் அதிமுக தொழிற்சங்கம், என்ஜினீயரிங் அசோசியேஷன், எம்ப்பிளாய்ஸ் ஃபெடரேசன், ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் சங்கம் மற்றும் சிஐடியு ஆகிய 5 சங்கங்கள் பல்வேறு காரணங்களுக்காக கையெத்திடவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE